Tamil Kamaveri – என் தங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். அவள் சம்பாதிக்கும் போதே கூட வேலை பார்த்த ரவியை லவ் மேரேஜ் செய்து கொண்டாள். ரவியை காதலிப்பது எங்கள் வீட்டிற்கு ஏற்கனவே தெரியும். ரவியும் உரிமையோடு எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவான். என் வீட்டில் அனைவரிடமும் நன்றாக பேசிப் பழகுவான். என்னை அக்கா என்று அழைக்கும் போது என் தங்கை அவனைத் திட்டுவாள்.
மன்னினு சொல்லு உனக்கும் அவ அக்கானா நீ எனக்கு தம்பி முறைடானு சொல்ல நான் உட்பட ரவியும் சிரித்துக் கொள்வோம். ஆனால் நானும் திருமணம் ஆகாதவள் என்பதால் அவன் மன்னி என்று அழைக்க எனக்கும் நெருடலாக இருந்தது. ரவியும் விரும்ப வில்லை ஆதலால் என்னை அவன் பத்மா என்றே பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்தான். ஆனால் போங்க வாங்க என்று சொல்வதால் என் தங்கையும் அதை ஏற்றுக் கொண்டாள். எனக்கும் அது வசதியாகவே இருந்தது.
தங்கை ரவியை காதலிப்பது வீட்டில் தெரிந்த போதே என் வீட்டில் எனக்கு கல்யாணம் செய்ய தீவிரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள். வரன்களும் வேகமாக வந்து போனாலும் எதுவும் செட் ஆகவில்லை. எனக்கு திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த நிலையில் என் தங்கை நித்யாவுக்கு சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட வேண்டும் என்கிற ஆசை வர அதை அப்பா அம்மாவிடம் சொல்ல தைரியம் இல்லாமல் என்னிடம் சொன்ன போது நான் அதற்கு ஒகே சொல்லி விட்டு வீட்டில் அம்மாவிடம் சம்மதம் கேட்ட போது அம்மா ரொம்பவே கோபமாகி கொந்தளித்து விட்டாள்.
அப்படி என்ன உன் தங்கச்சி அவசரம், அதான் அவளுக்கு பிடிச்ச ரவியை திருமணம் செய்ய ஒகே சொல்லிடோமே. அக்காவுக்கு ஒரு வாழ்க்கை அமையுற வரைக்கும் பொறுத்துக்க முடியாதா என்று தங்கையிடம் சண்டைக்கு போக அம்மா, தங்கைக்குள் பெரிய சண்டை வெடித்து என்னால் சமாதானம் செய்ய முடியாத அளவிற்கு போய் விட்டது. இந்த விஷயத்தில் அப்பாவும் தங்கையை சுயநலக்காரி என்று திட்ட ஆரம்பித்த போது தங்கை கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு போய் விட்டாள். மறுநாளை ரவியை ஒரு கோவிலில் வைத்த கல்யாணம் செய்து கொண்டு தனி வீட்டில் வாழ்க்கையை தொடங்கி விட்டாள்.
ரவியும் தங்கைக்கு அட்வைஸ் செய்தும் பயனில்லை. தங்கை எப்போதும் பிடிவாதக்காரி என்பதால் ரவியும் வேறு வழி இல்லாமல் தங்கையோடு தனி வீட்டில் குடும்ப நடத்த தொடங்கி விட்டார். ஆனால் என் அப்பா, அம்மாவை சந்திக்க தைரியமில்லாமல் என்னை வீட்டுக்கு அருகில் இருந்த கோவிலுக்கு வரச் சொல்லி மன்னிப்பு கேட்டார். நானும் உன் மீது தவறு இல்லை என் தங்கை மீதும் தவறு இல்லை. அவள் என்னிடம் சம்மதம் கேட்டுத் தான் திருமணம் செய்தாள். அப்பா, அம்மாவுக்கு என் மீது உள்ள அக்கறையில் அவள் மீது கோபப் பட்டு விட்டார்கள். எல்லாம் சரி ஆகி விடும் என்று ரவிக்கு ஆறுதல் சொன்னேன்.